குளம் போல் தேங்கும் மழை நீர்! வீசும் துர்நாற்றம்

56பார்த்தது
குளம் போல் தேங்கும் மழை நீர்! வீசும் துர்நாற்றம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் கண்ணனூர் சந்திப்பு சாலையில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் மழைநீர் தேங்கி வடியாமல் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி