"பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது"

8932பார்த்தது
"பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது"
பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக 300 இடங்களுக்கு மேல் வென்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தேசத்தை வழிநடத்திக் கொண்டிருந்த பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "2004-ல் வாஜ்பாய் ஆட்சி அமைப்பார்கள் என கருத்துக்கணிப்பு வந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நாளை புதிய விடியல் ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்" என்று அவர் பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்தி