தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

56பார்த்தது
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 24) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி