தமிழ்நாட்டில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மழை

57பார்த்தது
தமிழ்நாட்டில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. நேற்றைய தினம் (ஜூலை 4) சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த இரு நாட்களுக்கும் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி