காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் இருந்தும் ராகுல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வயநாடு எம்.பி.யாக இருந்த அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.