மோடிக்கு கை கொடுத்து வாழ்த்திய ராகுல் காந்தி!

84பார்த்தது
மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜக எம்.பி., ஓம் பிர்லா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்வாகியுள்ளார். 307 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஓம் பிர்லா வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி., ஆகியோர் இணைந்து அவரை கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கும் கை கொடுத்த ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததோடு, இருவரும் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது இருக்கைக்கு கூட்டிச் சென்று அமரச் செய்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர இந்தியாவில் 4வது முறையாக சபாநாயகர் ஒருவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: SansadTV

தொடர்புடைய செய்தி