நீலகிரியில் வேட்பு மனுத்தாக்கலின்போது அதிமுக -
பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும்
பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை ஆகியோர் காவல்துறையைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் அதிமுக, பாஜகவினர் மனுத் தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து
அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.