விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விராலிமலை போலீசார் கல்லுகுடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன்(50) என்பவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.