வெளிநாட்டில் இறந்தவர் உடலை மீட்டு தர மகள் கோரிக்கை!

1874பார்த்தது
வெளிநாட்டில் இறந்தவர் உடலை மீட்டு தர மகள் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரை விடுதியில் வசிப்பவர் அண்ணாமலை வயது 47 இவர் சவுதி அரேபியாவில் கட்டிட தொழிலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அண்ணாமலை கடந்த 17 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரை பார்த்து விட்டு மீண்டும் பணிக்கு சென்றதாகவும் நேற்று காலை மரணம் அடைந்து விட்டதாக செய்தி வந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை உடனடியாக மீட்டு தர அண்ணாமலையின் மகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி