அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி

53பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலைய கட்டிடம் பழுதடைந்து பெயர்ந்து உள்ளது. இன்று அக்.16 பெய்த கனமழையில் பழுதடைந்த கட்டிடத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துக்காக பயணிகள் நனைந்து கொண்டே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த பேருந்து நிலையத்தை சீரமைப்பு செய்து தரக்கோரி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி