தி.மலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

57பார்த்தது
தி.மலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்., 16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்., 17) அதிகாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி