ஆவுடையார் கோவிலில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம்!

54பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவிலில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்திபெற்ற ஆவுடையார்கோவில் என அழைக்கப்படும் திருப்பெருந் துறை ஆத்மநாத சுவாமி ஆலயத் தில் ஆனி திருமஞ்சன மாணிக்க வாசகர் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவந்தார் அதில் ஏழாம் திருவிழாவில் இரவு குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் சிவபெருமான் அலங்கரத்தில் மாணிக்கவாசகர் சுவாமி வீதி உலாவந்தார் திரு விழாவின் முக்கிய நிகழ்சியாக ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் ஆத்மநாதசுவாமி கோயில் முன்தேரோட்டம் புறப்பட்டு நான்கு ரதவீதிகளிலும் சுற்றி வந்தது. மாணிக் கவாசர். தேரில் எழுத்தருளினார். காலை 10 மணியளவில் தேர் சக்கரத்தில் முக்கிய பிரமுகர்கள் தேங்காய் உடைத்தனர். பின்னர் ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான வர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி