காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா நேற்று காலை விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று இரவு ஶ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமிக்கும் ஶ்ரீ ஞானாம்பிகைக்கும் திருக்கல்யாணம் வைதீக முறைப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.