பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அங்கு முதியவர் ஒருவர் மைனர் சிறுவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இஸ்லாமிய வகுப்புகளுக்கு சென்ற சிறுவனுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. விசாரணை நீதிமன்றம் பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் முதியவருக்கு தண்டனை விதித்தது. அவருக்கு மொத்தம் 56 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு வழக்கில் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.