5 பேர் இறந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் கைது

59பார்த்தது
5 பேர் இறந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் கைது
சேலம் சுக்கம்பட்டியில் 5 பேர் இறந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் வீராணத்தை அடுத்த சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நேற்று சரக்குலாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்கூடம் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்ததால் லாரி மெதுவாக சென்றது. லாரிக்கு பின்னால் 2 டூவீலர்கள் வந்தன. அதில் 8 பேர் இருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து வேகமாக வந்து 2 டூவீலர்கள் மீதும் மோதியது. இதில் லாரிக்கும், பேருந்துக்கும் இடையே 2 டூவலர்களும்
சிக்கி அப்பளம் போல் நொறுங்கின. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், 2 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி