சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

54பார்த்தது
சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
கேரள பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் மேடை நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மாள் அனுமதி மறுத்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி நிகழ்வை நடத்தும் கல்லூரி யூனியனின் ஏற்பட்டுக்கு அனுமதி மறுத்து துணைவேந்தர், பதிவாளர் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்கலைகழகத்திடம் முன் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்த கல்லூரி யூனியன் முடிவு எடுத்ததற்கு நிர்வாகத்தின் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்கலை வளாக மைதானத்தில் DJ பார்ட்டிகள் மற்றும் இசை இரவுகளை தடை செய்யும் அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி