ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பை சரியாக வழங்குக

53பார்த்தது
ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பை சரியாக வழங்குக
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நன்னடதை விதிகளைக் காரணம் காட்டி ரேஷன் கடைகளில் மே மாதம் வழங்கப்பட வேண்டிய பொருட்களை வழங்காமல் புறக்கணித்தது திமுக அரசு. மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி