மீண்டும் தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி

59பார்த்தது
மீண்டும் தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி மீண்டும் நாளை (திங்கள்கிழமை) விமானம் மூலம் சென்னை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நாளை மாலை 4 மணிக்கு தமிழக பாஜக சார்பில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசவுள்ளார். கடந்த வாரத்தில் திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடந்த அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்றுச் சென்றிருந்தார். நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி