தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சண்முகவேல் என்பவர் விஏஓவாக (கிராம உதவியாளர்) பணியாற்றி வருகிறார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவர் உள்ளூரில் வசிக்கும் ஒரு பெண்ணை இரவு நேரத்தில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.