பழனி முருகன் கோவில் உண்டியல் வரவு ரூ.2 கோடி

78பார்த்தது
பழனி முருகன் கோவில் உண்டியல் வரவு ரூ.2 கோடி
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல்கள் கடந்த 29 நாட்களில் வந்த பக்தர்களின் வரவால் நிரம்பியது. இதையடுத்து திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூ.2 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 264 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 793 கிராமும், வெள்ளி 11.856 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 545-ம் கிடைத்தன.

தொடர்புடைய செய்தி