தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சி, நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசாங்கத்தை அமைக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை முன்பான உரையில், வருங்காலத்திலும் அதே உத்வேகத்துடன் நமது அரசு இயங்கும். நாட்டை வழிநடத்த மூன்றாவது முறையாக வழிநடத்த எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். வரும் ஒன்பதாம் தேதி மாலை ஆறு மணிக்கு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.