அதிமுகவின் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.