ரூ.1,000 நிறுத்தப்படும் என மிரட்டும் திமுகவினர்

62பார்த்தது
ரூ.1,000 நிறுத்தப்படும் என மிரட்டும் திமுகவினர்
இப்போது திமுகவினர் மகளிரை எப்படி மிரட்டுகின்றனர் தெரியுமா? திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரும் ரூபாய் நின்றுவிடும் என்று கூறுகின்றனர். அப்படி மிரட்டிவிட்டு அவர்கள் கையில் 300 ரூபாயைக் கொடுத்துவிட்டு செல்கின்றனர் என்று திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமை தொகை என தமிழகம் முழுவதும் தகுதியுடைய பெண்களுக்கு மாதம் ரூ.1000 தமிழக அரசால் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி