அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேமிப்புக் கணக்குகளை தொடங்க, அஞ்சல் துறையுடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை செலுத்த, வங்கிக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு தேவைப்படுகிறது. வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமானால் பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.