மகனை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்

5151பார்த்தது
மகனை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்
மகனை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் நடந்துள்ளது. ஆந்திர காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் கொடமுலா பிரசாத் தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவரது மகன் ஷேஷ் கமல் (20) நேற்று முன்தினம்(மே 31) இரவு தனது தந்தையை பைக்கில் அழைத்துச் சென்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் விட்டுச் சென்றார். பின்னர் சம்பள பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் தருமாறு மகன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரசாத் துப்பாக்கியால் சுட்டதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி