தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவருக்கு சக மாணவர்கள் கொடுமை

30955பார்த்தது
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பில் கனமான கற்களை கட்டி தொடங்கவிட்டும், ஃபயர் ஸ்ப்ரே மூலம் முகத்தை எரிக்க முயற்சித்தும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொடுமை செய்துள்ளனர்.‌ 20000 ரூபாய் கடன் வாங்கி அதை ஆன்லைன் விளையாட்டு மூலம் இழந்துள்ளார். கடன் கொடுத்த மாணவர்கள் வட்டியுடன் 50000 ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். புகாரின் பேரில் போலீசார் கொடுமைப்படுத்திய மாணவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி