“அரசியல் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன” - தமிழிசை

67பார்த்தது
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வருத்தமளிக்கிறது.ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகிவிட்டது. சமீபத்தில் அதிமுக பிரமுகர், விசிக ஒருவர் என தொடர்ந்து அரசியல் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. முதலமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும், இனிமேல் இதுபோன்ற ஆராஜகம் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி