சிபிஆர் செய்து குரங்கை காப்பாற்றிய போலீஸ் (வீடியோ)

59பார்த்தது
இந்தியாவில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தரில் மரத்திலிருந்த குரங்கு ஒன்று வெயில் தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தது. இதைக் கண்ட தலைமை காவலர் விகாஸ் என்பவர் உடனடியாக அந்த குரங்குக்கு சிபிஆர் என்று சொல்லப்படும் சிகிச்சை அளித்தார். பின்னர் குரங்குக்கு தண்ணீர் கொடுத்தும், தண்ணீரில் குளிக்க வைத்தும் அந்த குரங்கை காப்பாற்றினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவலர் விகாஸை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி