நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

60பார்த்தது
நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகர் சித்திக் மீது வழக்கு தொடரப்பட்டது. அவரின் முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையில், சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது. மேல்முறையீடு மனு தொடர்பாக கேரள அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.