ரூ.22 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

66பார்த்தது
ரூ.22 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
குவாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மலப்புரம் மாவட்டம் வாளஞ்சேரி இன்ஸ்பெக்டர் சுனில்தாஸ், எஸ்ஐ பிந்துலால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எஸ்ஐ பிந்துலால் நேற்று (மே 30) கைது செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் சுனில்தாஸ் தலைமறைவாக உள்ளார். வழக்குப்பதிவு செய்து கைது செய்வதாக மிரட்டி குவாரி உரிமையாளரிடம் ரூ.22 லட்சம் பறித்ததாக இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

வாளஞ்சேரியில் உள்ள கிரானைட் குவாரியில் இருந்து வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வெடி பொருட்களை முதலில் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, குவாரி உரிமையாளர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்வதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி