மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் மலை கோவில் தொடர்பாக மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அந்த புகாரில் கோரப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.