காவலரைத் தாக்கும் காணொலி: தமிழ்நாடு அல்ல

77பார்த்தது
காவலரைத் தாக்கும் காணொலி: தமிழ்நாடு அல்ல
'சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீசுக்கு இந்த நிலைமையா" என்று கூறி காவலரை ஒருவர் தாக்கும் காணொலி, தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிட்டு ‌சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இக்காணொலி தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.‌ இது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் பகுதியில் தலைமை காவலர் ஒருவரை கட்டையால் தாக்கிய காணொலி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி