ஐஸ்கிரீமில் விஷம்.. குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு

50பார்த்தது
ஐஸ்கிரீமில் விஷம்.. குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ளது புல்லாகவுண்டம்பட்டி. அங்குள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவருடைய மனைவி சுகமதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகளீர் குழுவில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கோகுல் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு நடந்த சண்டையில் கோகுலை சுகமதி தாக்கியுள்ளார். இதையடுத்து கோபித்துக்கொண்டு பெரியம்மா வீட்டிற்கு சென்ற கோகுல் 10 நாட்கள் ஆகியுள்ளது. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் எடுக்காததால், ஐஸ்கிரீமில் விஷம் கலந்து குழந்தைகைளை கொன்றுவிட்டு சுகமதி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து கோகுலை, தற்கொலைக்கு தூண்டியதாக கூறி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி