நிதி நிறுவன உரிமையாளர் மீது போக்சோ வழக்கு

73பார்த்தது
நிதி நிறுவன உரிமையாளர் மீது போக்சோ வழக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பக்குடி ரயில்வே கேட் அருகே தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் ரமேஷ். இவர், தனது நிறுவனத்தில் வேலை செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அதே போல், சிறுமியை வேலைக்கு அமர்த்தியதற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி