குடியரசுத் துணைத்தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

58பார்த்தது
குடியரசுத் துணைத்தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருடன் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவை உறுப்பினர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று பட்ஜெட் தொடர் நிறைவடைந்து, முதலில் மக்களவையும், பிறகு மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி