விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சார்லெஸ் அலெக்சாண்டர் என்பவர் அளித்துள்ள மனுவில், ஏகே47 துப்பாக்கியுடன் இருப்பது போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களை சீமான் பயன்படுத்துகிறார். சீமான் அரசியல் காரணங்களுக்காக பிரபாகரன் படங்களை பயன்படுத்துகிறார். எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.