மின்கட்டண உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் - ஜெயக்குமார்

52பார்த்தது
மின்கட்டண உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் - ஜெயக்குமார்
மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை 4.83% உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார், " 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி