வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க திங்கட்கிழமை வரை அவகாசத்தை நீட்டித்தது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை இயக்க நாளை முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய 20000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால் திங்கட்கிழமை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.