இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் தொடங்கப்பட்டது. ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.