காலில் முறிவு.. அட்டையில் கட்டுப் போட்ட மருத்துவர்கள்

76பார்த்தது
காலில் முறிவு.. அட்டையில் கட்டுப் போட்ட மருத்துவர்கள்
பீகார் மாநிலம் முசாபர்பூரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நிதிஷ்குமார் என்ற இளைஞருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் மீனாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை வழங்காமல், உடைந்த காலுக்கு அட்டையை வைத்து கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அந்த இளைஞரைக் கவனிக்க கடந்த 5 நாட்களாக எந்த மருத்துவரும் வரவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி