அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வழங்கி அபகரித்ததாக கரூரை சேர்ந்த தொழிலதிபரான பிரகாஷ் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவரின் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 15) உத்தரவிட்டுள்ளார்.