கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த லதாவுக்கும் (24), மதுரை வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான அவரது தாய் மாமனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் லதா அதே ஊரை சேர்ந்த வீரபாபு என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதை கண்டித்தும் திருந்தாதால் அவரை அவர் கணவர் விவாகரத்து செய்தார். இதனையடுத்து வீரபாபுவுடன் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்ற லதா அவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் மதுரையில் வீரபாபுவுடன் தங்கியிருந்த லதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக வீரபாபுவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்நிலையில் அயர்ன் பாக்ஸை சூடாக லதா முகத்தில் வைத்து காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.