கேரளாவில் திடீர் நில அதிர்வு! பீதியில் அலறிய மக்கள்

56பார்த்தது
கேரளாவில் திடீர் நில அதிர்வு! பீதியில் அலறிய மக்கள்
கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் இன்று (ஜூன் 15) காலை பல்வேறு இடங்களில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. காலை 8.15 மணியளவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பல வீடுகளில் பாத்திரங்கள் உருண்டதாகவும், வீடுகள் குலுங்கியதாகவும் அப்பகுதியினர் கூறினர். இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். 4 வினாடிகள் மட்டுமே இந்த நில அதிர்வு காணப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி