“பிரதமர் சொன்னதை புரிந்துகொள்ள வேண்டும்” - எல்.முருகன்

74பார்த்தது
“பிரதமர் சொன்னதை புரிந்துகொள்ள வேண்டும்” - எல்.முருகன்
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (மே 24) பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பூரி ஜெகநாதர் கோயில் சாவி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான விஷயத்தை மக்கள் மத்தியில் திணிக்க முயற்சி செய்கிறார். முதலமைச்சருக்கு இது அழகல்ல. பிரதமர் என்ன சொன்னார் என்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் எந்த இடத்திலும் தமிழர்களை, தமிழ்நாட்டை பற்றி குறிப்பிடவில்லை. தமிழர்களையும், தமிழையும், தமிழ் மக்களையும் போற்றிக் கொண்டிருப்பவர் பிரதமர்” என்றார்.

தொடர்புடைய செய்தி