குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் கடந்த மே 3-ம் தேதி அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. ஒரு பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனம் ஒன்று பிளாட்பாரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அது பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் கூட்டத்தை நோக்கி விரைந்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பயணி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.