ஒரு தலை காதல் - சிறுமி எரித்துக் கொலை

83பார்த்தது
ஒரு தலை காதல் - சிறுமி எரித்துக் கொலை
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமியை செல்போன் மூலம் தொடர்புகொண்ட விக்னேஷ், “நான் இருக்கும் இடத்திற்கு நீ வராவிட்டால் செத்து போவேன்” என மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் கூறிய காட்டுப் பகுதிக்குள் சிறுமி சென்றுள்ளார். அங்கு, சிறுமியை எரித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி