சென்னை: 3வது நாளாக பகலில் வெயில் நள்ளிரவில் மழை

69பார்த்தது
சென்னை: 3வது நாளாக பகலில் வெயில் நள்ளிரவில் மழை
சென்னையில் நேற்று (அக். 19) நள்ளிரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. வடபழனி, கோடம்பாக்கம், தரமணி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை வரை மழை நீடித்தது. கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பகல் நேரத்தில் வெயில் அடிப்பது, இரவு நேரத்தில் மழை பெய்வது என்ற வானிலை சூழல் நிலவி வருகிறது. இது வரும் நாட்களிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி