தமிழகம்: கர்நாடக அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 300 கிலோ குட்கா

58பார்த்தது
தமிழகம்: கர்நாடக அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 300 கிலோ குட்கா
வேலூர் அருகே கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்காவை தமிழக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று (அக். 19) இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் குட்கா இருந்தது தெரிந்தது. தொடர்ந்து பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி