துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

68பார்த்தது
துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது
சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியல் ரவுடியான சேது (30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி புழலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், உடன் இருந்த A பட்டியல் ரவுடியான பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரவுடி சேதுவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி