மக்களின் துயரத்தில் பங்கெடுக்க நேரமில்லை - கே.பாலகிருஷ்ணன்

83பார்த்தது
மக்களின் துயரத்தில் பங்கெடுக்க நேரமில்லை - கே.பாலகிருஷ்ணன்
மக்களின் வேதனையிலும் துயரத்திலும் பங்கெடுக்காமல் இருக்கிறார் பிரதமர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளகளிடம் பேசிய அவர், 'தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட சில நிமிடங்கள் ஒதுக்காத பிரதமர் நரேந்திர மோடி கோவில் கோவிலாக செல்கிறார். மக்களின் வேதனையிலும் துயரத்திலும் பங்கெடுக்காமல் இருக்கிறார் பிரதமர். அரசியலில் மதம் கலக்கப்பட்டால் மக்கள் நலன் காணமால் போய் சுயநலமும், தனிநபர் துதி மட்டுமே மேலோங்கும் என்பதற்கு சரியான உதாரணம் பிரதமர் மோடிதான்' என சாடினார்.

தொடர்புடைய செய்தி